பொறியியல் துணை கலந்தாய்வு.! நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

சென்னை: பி.இ, பி.டெக் உள்ளிட்ட படிப்புகளுக்கான துணை கலந்தாய்விற்கு நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2021-22 பொதுக் கலந்தாய்வின் முடிவில் நிரப்பப்படாமல் உள்ள பொது, தொழிற்கல்வி மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% சிறப்பு உள் ஒதுக்கீட்டிற்கான இடங்களுக்கு, பொதுக் கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாத தகுதி வாய்ந்த மாணவர்கள் மற்றும் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்ற மானவர்கள், விண்ணப்ப கட்டணமாக ரூ.500 (எஸ்.சி, எஸ்.டி - ரூ.250) செலுத்தி https://www.tneaonline.org  அல்லது https://www.tndte.gov.in என்ற இணையதளம் வாயிலாக நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தை பதிவு செய்யும் போதே மாணவர்கள் தங்கள் அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலதிக தகவல்களுக்கு மேற்கூறிய இணையதளத்தையோ அல்லது 044-2912081, 82, 83, 84 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: