சென்னை: ஜெயலலிதா நினைவிடத்துக்கு சசிகலா வருவது வீண் முயற்சி என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். அதிமுக பொன்விழாவை ஒட்டி சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஜெயக்குமார் இவ்வாறு கூறினார். மேலும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நாகை மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.