மெக்சிகோ நாட்டில் இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மெக்சிகோ நாடு, போதைப்பொருள் பயன்பாடு, போதைப்பொருள் கடத்தல், ஆட்கடத்தல், பொதுமக்கள் மற்றும் செய்தியாளர்களை பொது வெளியில் சுட்டுக்கொன்றுவிட்டு தப்புதல் உள்ளிட்ட குற்ற செயல்களின் முக்கிய மையமாக இருந்து வருகிறது. இங்கு போதைப்பொருள் கடத்தலுக்காக சட்ட விரோதமாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுரங்கப்பாதைகள் பயன்பாட்டில் உள்ளன.