ஏதென்ஸ்: கிரீஸ் நாட்டில் உள்ள கிரீட் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 6.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸுக்கு சொந்தமான கிரீட் தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் பீதியில் அலறி அடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர். முதற்கட்ட தகவலின்படி ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று காலை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஏதென்ஸில் உள்ள ஜியோ டைனமிக் நிறுவனமானது கிழக்கு தீவில் உள்ள கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.