சேலம்: சேலம் சூரமங்கலம் பதிவுதுறை அலுவலகத்தில் விடிய, விடிய நடந்த விஜிலென்ஸ் சோதனையில், கட்டுக்கட்டாக பணம், முக்கிய ஆவணங்கள், டைரிகள் சிக்கியது. சேலம் சூரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில், பத்திரப்பதிவுக்கு பணம் வசூலிப்பதாக சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கிருஷ்ணராஜீக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை 5.45மணிக்கு சார் பதிவாளர் அலுவலகத்துக்குள் புகுந்து, சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை விடிய, விடிய நடந்தது. நேற்று அதிகாலை 5.45 மணிக்குத்தான் முடிந்தது.