சியோல்: அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் போன்ற உலக நாடுகள், ஐநா போன்ற அமைப்புகளின் தடைகள், எதிர்ப்புகளையும் மீறி, வடகொரிய கடந்த சில வாரங்களாக அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தி வருகிறது. சமீபத்தில் அது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரயிலில் இருந்தும் கூட ஏவி சோதனை செய்து, பரபரப்பை ஏற்படுத்தியது. வடகொரியாவுக்கு போட்டியாக தென்கொரியாவும் நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை வீசி சோதனை நடத்தியது. இந்நிலையில், வடகொரியா மலைப்பாங்கான ஜகாங் மாகாணத்தில் இருந்து குறுகிய தூர ஏவுகணையை வீசி நேற்று சோதனை நடத்தியது. இந்த ஏவுகணை வடகிழக்கு கடலில் போய் விழுந்தது. இதனால், தென் கொரியாவும் ஜப்பானும் பீதி அடைந்துள்ளன.