தசரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வரவுள்ள நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: தசரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வரவுள்ள நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா எழுதியுள்ள கடிதத்தில் அறிவுறுத்தியுள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் 144 தடை உத்தரவை பயன்படுத்தவும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருவிழாக்கள், கூட்டங்கள் போன்றவற்றால் கொரோனா தொற்று அதிகரிக்கலாம் என்பதால் எச்சரிக்கை அவசியம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று குறைந்து வரும் போதிலும் தனிமனித இடைவெளி உள்ளிட்ட வழிகாட்டு நெறிகளை பின்பற்ற வேண்டும் என்று அஜய் பல்லா கடிதம் அனுப்பியுள்ளார்.

Related Stories: