டெஹ்ராடூன் : உத்தரகாண்ட் மாநில எல்லைப் பகுதியில் ஊடுருவிய சீன ராணுவம் பல்வேறு கட்டமைப்புகளை சேதப்படுத்தி சென்றுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. லடாக் எல்லையில் சீன ராணுவத்தின் அத்துமீறல்கள் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு குறைந்துள்ளது. இந்த நிலையில், உத்தராகண்ட் மாநிலம் எல்லை வழியே இந்தியாவுக்குள் சீன ராணுவம் ஊடுருவி இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி சுமார் 100 சீன குதிரை வீரர்கள் எல்லைப் பகுதியான பாராஹோட்டி வழியாக சுமார் 5 கிமீ தூரம் இந்திய பகுதிக்குள் நுழைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.