சென்னை: சென்னையில் தொழிலதிபர் தன்ராஜ் கோச்சாருக்கு சொந்தமான 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. தன்ராஜ் கோச்சாருக்கு சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவனம், வீடு, அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை வேப்பேரி, எழும்பூர், பாரிமுனையில் உள்ள என்.எஸ்.சி. போஸ் சாலை உள்பட 10 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வட்டிக்கு பணம் கொடுத்து நிலங்களை அபகரித்ததாக தனியார் நிறுவனம் ஒன்றின் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் அமலாக்கத்துறையிடம் புகார் அளித்திருந்தார்கள்.