சுரண்டை : சுரண்டை அருகே உள்ள இடையர்தவணை கீழகுளத்தில் நேற்று காலை பிறந்த ஆண் குழந்தை உடல் கிடப்பதாக சுரண்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுரண்டை இன்ஸ்பெக்டர் சுரேஷ், எஸ்.ஐ.விமலா மற்றும் போலீசார் விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் அந்த குழந்தை இருந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த கணவனை இழந்த பெண் ஒருவருக்கு அந்த குழந்தை பிறந்தது தெரியவந்தது.