சென்னை: மதுராந்தகம் அருகே சிறிய சிறிய ரக சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 500 வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பூண்டி கிராமத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையின் போது கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள், சரக்கு வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்த தோடு தாம்பரத்தை சேர்ந்த சூர்யா,பூபாலன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.