சென்னை: சென்னை ராயப்பேட்டையில் நடைபெறும் தென்னிந்திய திருச்சபைகளின் 75வது ஆண்டு பவள விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொண்டு அந்த அமைப்பின் புதிய இலச்சினை வெளியிட்டு பேசி வருகிறார். தென்னிந்திய திருச்சபைகளின் பவள விழா ஆண்டை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் இருக்கக்கூடிய அதன் தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பவள விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. 1974ம் ஆண்டு தொடங்கப்பட்ட திருச்சபை என்பது தென்னிந்தியாவின் 5 மாநிலங்களில் 40 லட்சம் கிறிஸ்துவ பெருமக்களை கொண்டிருக்கக்கூடிய மிகப்பெரிய திருச்சபையாகும்.