பீஜிங்: கொரோனா பீதியால் சீனாவில் இருந்து திரும்பி வந்த இந்தியர்களை மீண்டும் அனுமதிக்காமல் அலை கழிப்பதற்காக அந்த நாட்டுக்கு இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் வுகான் நகரத்தில் பரவிய கொரோனா வைரஸ், உலக நாடுகள் முழுவதும் பரவியதால், அனைத்து நாட்டுக்கிடையே விமான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சீனாவும் விமானச் சேவையை ரத்து செய்தததுடன், விசா வழங்குவதையும் நிறுத்தியது. இதனால், சீனாவில் படித்து வந்த மாணவர்கள், ஊழியர்கள், வணிகர்கள் உள்பட 23 ஆயிரம் பேர் இந்தியாவுக்கு குடும்பத்துடன் திரும்பினர்.