புதுடெல்லி: கடந்த 2012ல் கொண்டு வரப்பட்ட வரிச் சட்டத்தால், இந்தியாவில் தொழில் செய்த இங்கிலாந்தின் கெய்ர்ன் நிறுவனம் தனது பங்குகளை கிளை நிறுவனத்திற்கு மாற்றியதன் மூலம் முதலீட்டு லாபம் அடைந்ததாக கூறி ரூ.10,000 கோடி வரி வசூலிக்கப்பட்டது. இதை எதிர்த்து கெய்ர்ன் நிறுவனம் சர்வதேச தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர, சுமார் ரூ.8 ஆயிரம் கோடி வரியையும், அபராதத்தையும் ஒன்றிய அரசு திருப்பி தர தீர்ப்பளிக்கப்பட்டது. அந்த தீர்ப்பின்படி, பணத்தை வசூலிக்க வெளிநாடுகளில் இந்திய அரசுக்கு சொந்தமாக உள்ள ஏர்இந்தியா நிறுவனம் உள்ளிட்ட சொத்துக்களை ஏலம் விட கெய்ர்ன் நிறுவனம் நடவடிக்கை எடுத்தது.