நடைபாதையில் கட்டப்பட்ட விநாயகர் கோயில் அகற்றம்

அண்ணாநகர்: சென்னையை சேர்ந்த வேலு என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அமைந்தகரை, ரயில்வே காலனி, 2வது தெருவில் நடைபாதையை ஆக்கிரமித்து செல்வ விநாயகர் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இந்த கோயிலை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும், என கூறியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், நடைபாதையில் உள்ள கோயிலை அகற்ற மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. அதன்பேரில், 8வது மண்டல செயற்பொறியாளர் இனியன் தலைமையில் சுமார் 15க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள், நேற்று அதிகாலை அந்த கோயிலை இடித்து அகற்றினர்.

Related Stories: