பெரம்பூர்: தமிழகம் முழுவதும் ரவுடிகள் பட்டியலை தயார் செய்து, அவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, கடந்த 2 நாட்களில் 3,325 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, புளியந்தோப்பு நரசிம்மன் நகர் 3வது தெருவை சேர்ந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷை (42) கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இவர் மீது 5 கொலை வழக்கு, ஆள் கடத்தல், கொலை மிரட்டல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.