சென்னை: பூந்தமல்லி அடுத்த காட்டுபாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரமோத் என்ற வாலிபர் ஜோனர் என்ற நாய் ஒன்றை செல்லமாக வளர்த்து வருகிறார். இந்த ஊனமுற்று இருப்பதால் மற்ற நாய்களை போல வெளியே சென்று விளையாட முடியவில்லை. ஆனால் மோட்டார் சைக்கிளில் ரைடு செல்வது இந்த நாய்க்கு மிகவும் பிடிக்குமாம். இதையடுத்து அந்த நாய்க்கு கூலிங் கிளாஸ், கழுத்தில் செயின் மறறும் உடை அணிவித்து தனது மோட்டார் சைக்கிளில் வைத்து ஒரு ரவுண்டு அடித்து விட்டு வருவாரம் அந்த வாலிபர். தினமும் பூந்தமல்லியில் இருந்து வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் மோட்டார் சைக்கிளின் முன் பகுதியில் குழந்தையை அமர வைத்து கொண்டு செல்வது போல் அழைத்து சென்று வருகிறார்.