போடி: கேரளாவில் இருந்து போடிக்கு கடத்தி வரப்பட்ட 800 கிலோ ஏலக்காய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். கேரளாவில் இருந்து தேனி மாவட்டம் போடிக்கு வேன்களில் ஏலக்காய் கடத்தி வருவதாக போடி நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போடி மெட்டு சாலையில் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் நேற்று மாலை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். போடிமெட்டு மலைச்சாலையில் எஸ் வளைவில் வந்த 2 வேன்களை வழிமறித்து சோதனையிட்ட 800 கிலோ ஏலக்காய் மூட்டைகளில் இருந்தது தெரியவந்தது.