வேலூர், திருவண்ணாமலை நதியை மீட்டெடுத்த தமிழக பெண்கள்: பிரதமர் மோடி பாராட்டு

டெல்லி: கொரோனாவுக்கு எதிரான போரில் ஒவ்வொரு நாளும் இந்திய ஒரு புதிய சாதனை படைத்து வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியான வானொலி மூலம் இன்று பேசுகையில்; நதிநீர் நாட்டிற்கு மிக முக்கியம். அதனை பாதுகாக்க வேண்டியது இன்றியமையாதது. நதிகளை தூய்மையாக வைத்து கொள்வது நமது கடமை. நதிநீரை வீணாக்காமல், கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.மேற்கு இந்தியாவில் குஜராத், ராஜஸ்தானில் நீர் பற்றாக்குறை உள்ளது. கூட்டு முயற்சி மூலம் நமது ஆறுகளை மாசு இல்லாததாக மாற்ற முடியும். கங்கையை போற்றுவோம் திட்டம் இன்று வெற்றிகரமான திட்டமாக திகழ்கிறது. நதிகளை புண்ணியஸ்தலமாக மக்கள் வழிபடுகின்றனர்.

கங்கை, யமுனை, ஆகிய நதிகள் புனித நீராடும் இடமாக உள்ளது. அந்த நதிகளை மக்கள் கடவுளாக போற்றுகின்றனர். தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் உள்ள நாகநதி பல ஆண்டுகளுக்கு முன்பே வறண்டு விட்டது. அங்குள்ள பெண்கள் மக்களை இணைத்து கால்வாய்களை தோண்டி தடுப்பணைகளை உருவாக்கினர். அப்பகுதியை சேர்ந்த பெண்கள் தங்களின் முயற்சியால் நாகநதிக்கு மீள் உயிர் அளித்துள்ளார்கள். நதிகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் பாராட்டியே ஆக வேண்டும். நதிகளைப் போற்றி புகழ்கிறீர்கள்; அன்னையர் என்கிறீர்கள்; ஆனால் அவை ஏன் மாசுபட்டு போகின்றன? என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர் கொரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசி செலுத்துவதில் தினம் ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டு வருகிறது. நமது முறை வரும் போது நாம் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும்  யாருக்காவது தடுப்பூசி போடவில்லை எனில் அவர்களையும் அழைத்து சென்று தடுப்பூசி செலுத்த வேண்டும். வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் கொரோனா போராட்டத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

Related Stories: