சென்னை: தமிழகம் முழுவதும் 3-ம் கட்டமாக கொரோனா மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, கடந்த செப்டம்பர் 12ம் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் தடுப்பூசி முகாம் 20 லட்சம் தடுப்பூசிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கைவிட கூடுதலாக 28 லட்சத்து 91 ஆயிரத்து 21 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது மாபெரும் கொரோனா-19 தடுப்பூசி முகாம் செப்டம்பர் 19ம் தேதி 15 லட்சம் பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கைவிட கூடுதலாக 16 லட்சத்து 43 ஆயிரத்து 879 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் 3-ம் கட்டமாக கொரோனா மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது.