கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே மளிகை கடையில் தடை செய்யப்பட்ட குட்கா போதைபொருள் விற்ற கடைக்காரரை போலீசார் கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி அருகே மாதர்பாக்கம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை பாதிரிவேடு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பஜார் பகுதியில் மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதைபொருள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.