பாட்னா: பீகார் மாநிலம், மதுபானி மாவட்டத்தைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி லாலன் குமார் சபி. பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இவர் சிக்கினார். இந்த வழக்கை விசாரித்த ஜஞ்சார்பூர் துணை மண்டலத்தின் கூடுதல் மாவட்ட நீதிபதி அவினாஷ் குமார், ‘லாலன் தான் வசிக்கும் கிராமத்தில் உள்ள பெண்களின் சேலைகளை ஆறு மாதத்துக்கு இலவசமாக துவைத்து, அயர்ன் செய்து கொடுக்க வேண்டும்,’ என்று நூதன தீர்ப்பு அளித்தார்.