நீமுச்: மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் பணியாற்றும் பெண் காவலர் ஒருவர், அதற்கு முன்பாக நீமுச் மாவட்டத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டது. இந்நிலையில், பெண் காவலரை தனது தம்பியின் பிறந்த நாளுக்கு வரும்படி இளைஞர் அழைப்பு விடுத்தார். பெண் காவலர் அங்கு சென்ற போது, இளைஞரும், அவருடைய தம்பியும், மற்றொரு நண்பரும் சேர்ந்து அவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.