சென்னை: எம்.ஜி.ஆர் நகரில் முன்விரோத தகராறில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை எம்.ஜி.ஆர் நகர், டாக்டர் அம்பேத்கர் குடிசை பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து (35). இவருக்கும் கே.கே.நகர் பகுதியை சேர்ந்த தீபக் என்ற சீமகாளை (26) என்பவருக்கும் நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் இருந்த தீபக், எம்.ஜி.ஆர் நகருக்கு சென்று காளிமுத்துவை வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டினார்.