சென்னை: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மாநில தலைவர் கு.குமரேசன், பொது செயலாளர் எம்.பி.முருகையன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: மே மாதம் 11ம் தேதி முதல்வரால் அறிவித்தப்படி கொரோனாவால் இறந்த வருவாய் துறையை சேர்ந்க குடும்பத்துக்கு நிவாரணமாக ₹25 லட்சம் வழங்கி அரசாணை வெளியிட வேண்டும், சட்டமன்ற தேர்தல் நடத்தியதற்கான செலவின நிதி ஒதுக்கீடு, அனைத்து நிலை அலுவலர்களுக்கும் தேர்தல் மதிப்பூதியம் வழங்க வேண்டும். நேர்முக உதவியாளர் (தேர்தல்) பணியிடங்கள் ஏற்படுத்த வேண்டும். பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பதவி உயர்வினை பாதுகாத்து அரசாணை வெளியிட வேண்டும்.