ஊத்தங்கரை அருகே மின்வேலி அமைத்து மான் வேட்டை-தொழிலாளர்கள் 2 பேர் கைது

கிருஷ்ணகிரி : ஊத்தங்கரை அருகே மின்வேலி அமைத்து மானை வேட்டையாடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி பிரிவு வனவர் துரைக்கண்ணு தலைமையில் வனக்காப்பாளர்கள் அங்குரதன், மருகன், வனக்காவலர் பூபதி ஆகியோர் நேற்று காலை 6 மணியளவில் ஊத்தங்கரை அடுத்த நொச்சிப்பட்டி வனப்பகுதியில் உள்ள கல்லாவி காப்புக்காட்டில் வன விலக்கு வேட்டை தடுப்பு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பெரியபொம்பட்டி பவர்லைன் சரகத்தில், மின்வேலி அமைத்து, ஆண் புள்ளி மான் ஒன்றை வேட்டையாடி, அதனை வெட்டி தோலை உரித்துக் கொண்டிருந்த இருவரை கையும், களவுமாக பிடித்தனர். பின்னர், மானின் மாமிசத்தை பறிமுதல் செய்து, பிடிபட்ட ஊத்தங்கரை அருகே உள்ள பெரியபொம்பட்டி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளிகளான கார்த்திகேயன்(34), சரவணன்(27) ஆகியோரை கிருஷ்ணகிரி வனச்சரகர் அலுவலகத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து, இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, அவர்களை வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: