கரூர் : கரூர் ரயில் நிலைய வளாக நுழைவு பகுதியில் கால்நடைகள் ஆக்கிரமிப்பு காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.கரூர் ரயில் நிலையத்தின் வழியாக தினமும் 40க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன. தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து சென்று வருகின்றனர். பயணிகளை ஏற்றி விடவும், இறக்கி விடவும் ஏராளமான இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன போக்குவரத்தும் நடைபெற்று வருகிறது.