புதுடெல்லி: தேசிய பாதுகாப்பு அகாடமியில் (என்டிஏ) சேர்வதற்கான நுழைவுத் தேர்வில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று வந்தனர். பெண்கள் கலந்து கொள்வதற்கு ஒன்றிய அரசு அனுமதி மறுத்திருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநலன் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேசிய பாதுகாப்பு அகாடமி நுழைவு தேர்வில் பெண்களும் பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டும். இந்தாண்டே வரும் நவம்பரில் நடைபெறும் நுழைவுத் தேர்விலேயே பெண்களை அனுமதிக்க வேண்டும், அதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய அரசு செய்ய வேண்டும்,’ என்று திட்டவட்டமாக உத்தரவிட்டது.