புதுடெல்லி: இந்திய விமானப்படையின் போக்குவரத்துக்காக 56 விமானங்களை ரூ.20 ஆயிரம் கோடியில் வாங்க ஒன்றிய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்திய விமானப்படையில் போக்குவரத்து பணிகளுக்காக பயன்படுத்தப்படும் அவ்ரோ-748 விமானங்களுக்கு பதிலாக நவீன சி-295 போக்குவரத்து விமானங்களை வாங்க பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் வழங்கியது. இதைத் தொடர்ந்து, ஸ்பெயினின் ஏர்பஸ் டிபென்ஸ் அண்ட் ஸ்பேஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.20 ஆயிரம் கோடியில் 56 சி-295 விமானங்களை வாங்க இந்திய விமானப்படை நேற்று ஒப்பந்தம் செய்து கொண்டது.