புதுடெல்லி: கடந்த 2019-20ம் ஆண்டுக்கான நாட்டு நலப் பணித் திட்ட விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் காணொலி காட்சி மூலமாக நேற்று வழங்கினார். இதில், தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு விருது வழங்கப்பட்டது. நாட்டு நலப் பணியில் சிறந்த அதிகாரிக்கான விருது தூத்துக்குடியில் உள்ள காமராஜர் கல்லூரியின் பேராசிரியர் தேவராஜுக்கும், சிறந்த தன்னார்வலர்களுக்கான விருது சென்னை பச்சையப்பன் கல்லூரியின் மாணவர் அய்யனாருக்கும், ஜெருசலேம் பொறியியல் கல்லூரியின் மாணவர் நிதிஷுக்கும் வழங்கப்பட்டது.