கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பிளேடால் அறுத்துக்கொண்டு திரிந்த சிறுவன், சிறுமி மீட்பு

அண்ணாநகர்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று காலை 16 வயதுடைய சிறுமி மற்றும் 17 வயது சிறுவன் தங்களின் கையில் பிளாடால் அறுத்துக்கொண்டு சுற்றித் திரிந்தனர். அவர்களை ஆட்டோ டிரைவர்கள் மீடு கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில்,  இருவரும்  நாகை மாவட்டத்தை சேந்தவ சிறுவர்கள் என்பதும், இவர்கள் அதே பகுதியில் உள்ள  அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருவதும், இருவரும் காதலித்து, பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு ஓடி வந்ததும் தெரிய வந்தது.அவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், அவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இரு வீட்டாரும்  கோயம்பேடு காவல் நிலையத்திற்கு வந்தனர். அவர்களிடம் சிறுவர்களை அனுப்பி வைத்தனர்.

Related Stories: