சென்னை: தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, ஒன்றிய அரசிடம் அதிக தடுப்பூசிகள் அனுப்பும்படி கோரிக்கை வைத்துள்ளது. அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஒன்றிய மருந்து குடோனில் இருந்து 7 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் அடங்கிய 59 பார்சல்கள் நேற்று பகல் 12.10 மணிக்கு புனேவிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தன.