சென்னை: தொழில் வணிக மாதிரி வடிவம் மற்றும் திட்ட அறிக்கை தயாரிப்பு குறித்து தொழில் முனைவோர்களுக்கு 3 நாட்கள் இணையவழி பயிற்சி நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் www.editn.in (தமிழ்நாடு அரசின் தன்னாட்சி நிறுவனம்) சிட்கோ தொழிற்பேட்டையில் இயங்கி வருகிறது. தொழில்முனைவோர்களுக்காக ‘தொழில் வணிக மாதிரி வடிவம் மற்றும் திட்ட அறிக்கை தயாரிப்பு’ குறித்த இணைய
வழி கருத்தரங்கம் பற்றிய 3 நாட்கள் (அரை நாள்) பயிற்சி வரும் 29ம் தேதி முதல் 1.10.2021 வரை காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை நடைபெற உள்ளதால், தொழில் முனைவோர்கள், வருகை தந்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.