தமிழகத்தில் யானைகளை தனி நபர் வைத்திருக்க தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை:  கோயில் யானைகள் பராமரிப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழகத்தில் கோயில் யானைகள், வளர்ப்பு யானைகள், வனத்துறை யானைகள் ஆகியவற்றின் எண்ணிக்கை, அவற்றின் வயது, உடல்நிலை குறித்த அறிக்கையுடன் அவற்றின் வீடியோ பதிவையும் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்குகள், தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபது.

அப்போது, கோயில்களின் கட்டுப்பாட்டில் 32 யானைகளும், தனியார் கட்டுப்பாட்டில் 31 யானைகளும், வனத்துறை கட்டுப்பாட்டில் 67  யானைகளும் உள்ளதாகவும், அவற்றை வீடியோ பதிவு செய்யும் பணிகள் நடந்து வருவதால் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுத்தரப்பில் கோரப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று, வழக்கின் விசாரணையை அடுத்த மாதத்துக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், இனிமேல் தமிழகத்தில் தனியார் எவரும் யானையை பிடித்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கூடாது.  கடந்த 5 ஆண்டுகளில் வளர்ப்பு யானைகள், கோயில் யானைகள், வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்த யானைகள் குறித்த விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Related Stories: