சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 தளங்களிலும் கடந்த பிப். 13ம் தேதி 7ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கின. செப்டம்பர் கடைசி வரை பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பெரும்பாலான பணிகள் முடிவடைந்து விட்டன. எனவே 3 தளங்களையும் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தும் பணி நடந்து வருகிறது. கீழடியில் வீடியோ, புகைப்படம் எடுக்கும் பணிகள் முடிந்து விட்டதால் அகழாய்வு தளங்களில் உள்ள 8 குழிகளும் தார்ப்பாய் வைத்து மூடப்பட்டுள்ளன.