செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவருக்கும் உறவினரான அதே கிராமத்தை சேர்ந்த முருகன்(25) என்பவருக்கும் மணமகன் வீட்டில் இருவீட்டார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட சமூக நல அலுவலக அதிகாரிகள், திருமணமான சிறுமியை மீட்டு மீண்டும் குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர்.