சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

தண்டையார்பேட்டை: சென்னை பிராட்வே ஏழுகிணறு பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமிக்கு, ஆடுதொட்டியை சேர்ந்த கணேசன் (48) என்பவர்  பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து கடந்த 2020ம் ஆண்டு ராயபுரம் அனைத்து காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, கணேசன் 9 வயது சிறுமிக்கு பாலியல் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுதொடர்பான வழக்கு  சென்னை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி  ராஜலட்சுமி,  சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளி கணேசனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தும், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு நஷ்டஈடாக அரசு  ₹2 லட்சம் வழங்க உத்தரவிட்டார்.

இதையடுத்து, குற்றவாளி கணேசனை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் புழல் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை சிறப்பாக கையாண்ட காவல் ஆய்வாளர் மணிமேகலை மற்றும் காவல்துறையினரை உதவி ஆணையர் உக்கிரப்பாண்டியன், கூடுதல் துணை ஆணையர் ஆனந்தகுமார், வண்ணாரப்பேட்டை துணை ஆணையர்  சிவபிரசாத்  ஆகியோர் பாராட்டினர்.

Related Stories: