வடகிழக்கு பருவமழை காலத்தில் பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை..!!

சென்னை: வடகிழக்கு பருவமழை காலத்தில் பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். பருவமழை காலத்தில் அனைத்து துறையினரும் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்ல நடவடிக்கை தேவை. 1070, 1077 ஆகிய இலவச எண்களை மக்கள் தொடர்புகொள்ளும் வகையில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

Related Stories: