சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதிமுக கோரிக்கை குறித்து செப்டம்பர் 29க்குள் அதிமுகவுக்கு விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு கோர்ட் உத்தரவிட்டிருந்தது. 14,900 வாக்குசாவடிகளுக்கும் போதிய பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.