சென்னையில் ரூ.35 ஆயிரத்திற்கும் கீழ் சென்ற தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.208 குறைவு: மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்..!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.35 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. சென்னையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. ரூ.35 ஆயிரத்துக்கு மேல் விற்பனையான தங்கம் விலை திடீரென 35 ஆயிரத்திற்கும் கீழ் சென்றது. இந்த நிலையில், கடந்த 21ம் தேதி சவரனுக்கு ரூ.112 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.4,371க்கும் ஒரு சவரன் தங்கம் ரூ.34,968க்கும் விற்பனையானது. இதனையடுத்து, நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.35,064க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் தங்கத்தில் விலையேற்றம் இருந்தது. ஆனால், வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக இரண்டாம் வாரத்தில் தொடர்ச்சியாக தங்கம் விலை குறைக்கப்பட்டது. அடுத்து வந்த நாட்களிலும் ஓரளவுக்கு தங்கம் விலை அதிகரித்து வந்தது. இந்நிலையில் கடந்த நாட்களில் தங்கம் விலை தொடர்ச்சியாக குறைந்து வருகிறது.

இதனையடுத்து, இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 குறைந்து ரூ.34,856க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,357க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.64.90க்கு விற்பனையாகிறது.

Related Stories: