சோமாலியா : சோமாலியா நாட்டில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தியேட்டர் திறக்கப்பட்டு குறும்படங்கள் திரையிடப்பட்டதை அந்நாட்டு மக்கள் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக கொண்டாடுகின்றனர். சோமாலிய தலைநகர் மொகதீஷுவில் உள்ள பாரம்பரியமிக்க நேஷனல் தியேட்டர் கடந்த 1967ம் ஆண்டில் கட்டப்பட்டது. கடந்த 1991ல் அங்கு உள்நாட்டு போர் வெடித்த பிறகு அந்த தியேட்டர் ராணுவ தலமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. 2012ல் சீரமைக்கப்பட்டு மீண்டும் படங்களை திரையிட தயாரானபோது, அல்கொய்டா ஆதரவு தீவிரவாத அமைப்புகள் அங்கு வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.