சென்னை: திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர், பெரியகாலனியை சேர்ந்த சிலம்பரசன் (எ) ரிச்சர்ட் (30), தனது தந்தை பெயரிலான நிலத்தின் பட்டாவை தனது பெயருக்கு மாற்றம் செய்து தரக்கோரி திருப்பாச்சூர் விஏஓ திருமாலிடம் விண்ணப்பித்தபோது, ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அதன்படி, பணத்தை கொடுத்தபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.