சென்னை: கிஷ்கிந்தா வசமுள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான 177 ஏக்கர் நிலத்தை மீட்க சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனை நடத்தி வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தாம்பரம் அருகேயுள்ள கிஷ்கிந்தா வசமுள்ள இடம் ஜமீன்தார் ஒழிப்பு சட்டம் மூலம் உருவான நிலம் என்று அமைச்சர் கூறியுள்ளார். சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனை நடத்தி அது கோவில் நிலம் தான் என்று உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.