ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் சேதமடைந்த பாதாள சாக்கடையால் விபத்து அபாயம் நிலவுகிறது. சரி செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்திற்கு தினமும் 500க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளியூர் பேருந்துகள் வந்து செல்கின்றன. பேருந்து நிலையம் நுழைவு வாயிலில் பாதாள சாக்கடை செல்கிறது. இப்பாதாள சாக்கடையின் மேல் இரும்பினால் ஆன மூடி அமைக்கப்பட்டுள்ளது.