ராமநாதபுரம்: கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில் 2 விசைப்படகுகள் சேதமடைந்துள்ளன. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகி வருகிறது. தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தாலும் இலங்கை கடற்படையின் அட்டூழியங்களுக்கு தற்போது வரை முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிக்க சென்றனர்.