இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31,923 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 282பேர் பலி: 31,990 பேர் டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை அறிக்கை

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.46 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.35 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 31,923 பேர் பாதித்துள்ளனர்.

* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,35,63,421 ஆக உயர்ந்தது.

* புதிதாக 282பேர் இறந்துள்ளனர்.

* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,46,050 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 31,990 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,28,15,731 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,01,640 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* இந்தியாவில் இதுவரை 83,39,90,049 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

* நேற்று ஒரு நாள் மட்டும் 71,38,205 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

* இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 97.77% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.33% ஆக  உள்ளது

* சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.90% ஆக குறைந்துள்ளது.

Related Stories: