சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன், மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் நடராஜன் ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கை: வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெறக் கோரி ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் வரும் 27ல் அகில இந்திய பந்த் அறிவித்துள்ளது. இந்த போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) ஆகிய இடதுசாரி கட்சிகள் தங்களது முழு ஆதரவினை தெரிவித்துக் கொள்கின்றன.