ரூ11 லட்சம் மதிப்பு கஞ்சா பறிமுதல்

சென்னை: மாநகர போதை பொருள் நுண்ணரிவு பிரிவு போலீசார் நேற்று மாதவரம் ரவுண்டானா அருகே வாகன தணிக்கை செய்தனர். அப்போது ஆந்திராவிலிருந்து வந்த இரண்டு கார்களை சோதனையிட்டனர். அதில்  கஞ்சா இருந்தது. விசாரணையில் திண்டிவனம் தனலட்சுமி (56), வெங்கடேஸ் (34), சங்கர் (48), மேகலா (32), நந்தகோபால் (31), சிட்டலபாக்கம் மோகன்ராஜ் (27) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்து 110 கிலோ எடையுள்ள ரூ11 லட்சம் மதிப்பு கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Related Stories: