மீனம்பாக்கம்: சிவகங்கையை சேர்ந்தவர் முத்து சீமான் (25). கடந்த 2 ஆண்டுகளாக சார்ஜாவில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்தார். ஒப்பந்தக்காலம் முடிவடைந்ததால் கடந்த 17ம் தேதி சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தார். பின்னர் சிவகங்கையில் உள்ள தந்தைக்கு போனில் பேசியுள்ளார். ஆனால் மறுநாள் வரை வீட்டுக்கு வரவில்லை. இதனால் குடும்பத்தினர் பதற்றம் அடைந்தனர்.