கடலோர, டெல்டா மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்

சென்னை:தமிழகத்தில் தொடர்ந்து நீடித்து வரும் வெயில் காரணமாக வெப்ப சலனம் ஏற்பட்டு வருகிறது. அதனால் ஏற்படும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. வெப்ப சலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.

கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்யும். உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரில் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்யும்.

Related Stories: