சென்னை:தமிழகத்தில் தொடர்ந்து நீடித்து வரும் வெயில் காரணமாக வெப்ப சலனம் ஏற்பட்டு வருகிறது. அதனால் ஏற்படும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. வெப்ப சலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.